Thursday, March 11, 2010

சாமியார்களே முழுச்சிக்கங்க!!

இது ஒரு காமடி பீசு சீரியசாவாதிங்க!

நித்யானந்தா மாட்னதால மத்த சாமியாருங்கோ பீதியில பேதியவுராங்கோன்னு நண்பன் ஒருத்தன் சொன்னான். செரி நம்ப அவங்கள உஷாரா இருக்க கொஞ்சம் ஐடியா குடுக்கலான்னு தோனுச்சு, ஏன்னக்கா ரொம்ப நாளா ஆருக்கும் ஒதவாம நம்ப குடோன்ல ஐடியா ஸ்டாக் ஆகி ரொம்பிடிச்சி. அதனால சாமிருகளே உஷாரா கேளுங்க!!

மொதல்ல ஹாயா பெட்ல படுத்துக்கினு டி.வி. பாக்காம கம்ப்யூட்டர் ஒன்னு வாங்கி கத்துக்குங்க.ஏன்னக்கா ப்த்சு புத்சா விதவிதமா திணிக்கும் ஒரு மாடல்ல காமரா கண்டுபுடிக்கிறாங்க அத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் .அப்புறம் அத்த எங்கல்லாம் ஒளிச்சி வச்சி படம் புடிப்பாங்க அப்டின்றத ஸ்காண்டல் வீடியோ பகுதில பார்த்து உஷாராயிக்கலாம் .

அப்புறம் கதவதிர காத்து வரட்டும் ,ஜன்னல திற கேமரா வரட்டும் அப்டின்னு உதார்விடாம ஜாக்கிரதையா பேசணும் ,அல்லாகாட்டி நீங்க பேசுனத பதிவுக்கு தலைப்பா வச்சி உங்க டவுசரையே கிழிச்சி தொங்க வுட்ட்ருவாங்க .

முக்கியமா கூட இருக்குரவனுன்கள பகைக்கதிக்ங்க அது ரொம்ப டேஞ்சர் .உங்களுக்கு ஒரு நடிகைன்னா அவனுங்களுக்கு ஒரு துணை நடிகையாவது செட் பண்ணிவுடுங்க.

துட்டு வாங்குனா கொஞ்சம் பிரிச்சு குத்துடுங்க. அல்லாத்தையும் அமுக்க பாத்தா, குஜாலா இருக்க சொல்லோ எப்டியாது படம் புட்சு மீசக்காரண்டையாவது ,சன் கிட்டயாது வித்துடுவாங்க. அவங்க அத்த வச்சு ஜனங்கலாண்ட காசு புடுங்கிடுவாங்க. எப்டியோ ஒங்க பேரு ரிப்பெராயிடும்.

நடிகைங்கோ ஒழைச்சதுக்கு காசு கேட்டா குடுத்துடணும் இல்லன்னாக்கா அந்த பாவம் சொம்மவுடாது.

சொம்மா துட்ட சேத்து வைக்காம தங்கத்துலையோ, வெள்ளிலையோ. தகரத்துலையோ கோயில் கட்டி பெரிய மனுசங்கள கூட்டியாந்து (பெரிய மனுஷங்கன்னா அடுத்த ஸ்டேட் சி.எம்., ஜனாதிபதி ,அமைச்சருங்கோ இன்னும் லிஸ்ட் நிறைய இருக்கு)ஆசிர்வாதம் குடுத்தாக்கா நமக்கு பிரச்சினை வந்தா அவங்கள பாதிக்கும்னு நம்மள காப்பாத்திருவாங்க.

குறிப்பா நம்பள பத்தி புகழ்ந்து எயுதரவங்க அத்தாங்க எழுத்தாளறு சாரு மேரி லொள்ளு புட்சவங்களா இல்லாம பாலகுமாரன் மேரி இருக்கணும் .

எதோ எனக்கு தெரிஞ்சதை சொல்ட்டேன் .புரிஞ்சி பொழச்சிக்கினா செரி .

பி.கு.; அப்டியே மாட்னாலும் சோர்ந்து போவதிங்க கொஞ்சம் பொறுமையா இருந்தா ஜனங்க மறந்துடுவாங்க பொறவு தொழில தொடங்கலாம் உதாரணமா நம்ப சதுர்வேதி சாமியார பாருங்க இல. கணேசன் தலைமையில பி.ஜே.பி தயவுல என்னாமா சொற்பொழிவு ஆற்றி தொழில் தொடங்குனாரு.அதனால புத்தியோட பொழச்சிக்கங்க.







சரி மஹா ஜனங்களே, நம்ப பொழப்ப பாப்போம். படிசாச்சுன்னா ஒட்டு போடுங்க திட்டி எழுதுங்க!!!!

1 comment:

  1. அடிச்சி தூள் பண்ணிடம்மா. சோக்கா தான் சொல்லிகிற. ஆனா அந்த நித்தி கேப்பான்கிற? அவுருக்கு நிறிய அப்பாயின்ட்மென்ட் கீது.... தர்ஸனம் குடுக்க அ.. ஆன்

    ReplyDelete